அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

24.12.11

 சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு விருது: முதல்வர்


சென்னை: தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் மூன்று அரசு ஊழியர்களுக்கு நல் ஆளுமை விருது என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசின் திட்டங்களை ஊழியர்கள் கையாண்ட விதம், புது முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது மக்களுக்கான சேவைகள், வரி மேலாண்மை, நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையிலும் இருக்கும். ஆண்டுதோறும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் ஆகியவை சுதந்திர தினத்தனறு முதல்வரால் வழங்கப்படும் எனவும், இதற்காக ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.