அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

26.12.11


பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது-26-12-2011

பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 26ம் தேதி துவங்கியது.

அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு திங்கட்கிழமையன்று துவங்கியது.
இதில், கலந்து கொள்ள வரும் ஆசிரியர்கள், தங்களது பொது மற்றும் தொழிற்கல்வி, இதர தனித்திறன் குறித்த சான்றுகளின் அசல் மற்றும் நகல்களை அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் சான்று பெற்று எடுத்த வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு பிரிவாகவும், பிறகு மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் நேர்காணல் நடைபெறுகிறது.
27, 28ம் தேதிகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பள்ளிகளில் இந்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.