அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

5.12.11


சமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு-05-12-2011

குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தியுள்ளதை அடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பை, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியமாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
சென்னை பல்கலை பேராசிரியர் தாண்டவன், தி.நகரை சேர்ந்த ஹரிஷ் மேத்தா, எழும்பூர் மாநில மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசன் எட்வர்ட் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, பள்ளிகள் தரப்பில் புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக, ஈரோடு மாவட்டம் ஸ்ரீ சரவண் நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் சவுமிளா, ஓரியண்டல் பள்ளிகள் சார்பாக, அம்பத்தூர் அன்னைகா ஓரியண்டல் அரபிக் மேல் நிலைப் பள்ளி செயலர் சாகிஸ் அகமது, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சார்பாக, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் காப்பாளர் டான் பாஸ்கோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.