தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி-14-12-2011
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னையில் டிசம்பர் 17ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட, வட்டார, ஒன்றிய அளவில் அளிக்கப்படும் இந்த பயிற்சியை ஆசிரியர் பயிற்றுனர்கள் அளிக்கிறார்கள். இப்பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு ரூ.250 உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 5,798 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
மேலும், கற்றல்-கற்பித்தல் குறித்த உபகரணங்களை உருவாக்குது குறித்து 120 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பயிலரங்கம் டிசம்பர் 17ம் தேதி ந¨பெறுகிறது. உதவித் தொகை பெற்ற ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.