அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

3.1.12


10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு-03-01-2012

அதன்படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 6ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வு
ஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வு
ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினால், அரசு மற்றும் மெட்ரிக் என சி.பி.எஸ்.இ. தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே பாடப்பிரிவின் கீழ் தேர்வு எழுத உள்ளனர்.
சமச்சீர் கல்வித் திட்டத்தின் இம்முறை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவியல் செய்முறைத் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.