அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

19.5.12


ஆசிரியையிடம் ரூ1 லட்சம் மோசடி கருவூல அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்:ஆசிரியையிடம்
ரூ1லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கருவூல அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (60) ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு விடுப்பு நல (லீவு சரண்டர்) தொகை
ரூ1லட்சத்து 6 ஆயிரம், வரவேண்டி இருந்தது. அதற்காக காஞ்சிபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகினார்.
கருவூல அலுவலர்கள் ஜெகதாம்பாளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டதாக கூறினர். வங்கியில் சென்று விசாரித்தபோது ஜெகதாம்பாள் பெயருக்கு கருவூலத்தில் இருந்து எந்த பணமும் வரவில்லை என்றனர். எனவே ஜெகதாம்பாள் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஜெகதாம்பாள் உதவி கருவூல அலுவலர் செல்வராஜிடம் புகார் செய்தார். கருவூல அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருவூல இளநிலை உதவியாளர் பிரபாகரன், கருவூலத்தில் இருந்து வங்கிக்கு கொடுத்தனுப்பிய சிடியில் ஜெகதாம்பாள் பெயருக்கு பதில் தனது உறவினர் மணிகண்டன் என்பவரின் பெயரை சேர்த்து வங்கியில் கொடுத்தது தெரியவந்தது.
மேலும் பணம் முழுவதையும் ஏடிஎம் கார்டு மூலம் மணிகண்டன் எடுத்துள்ளார். இதற்கு பிரபாகரன் உதவி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரபாகரனை கருவூல அதிகாரி நேற்று சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார். மோசடி தொடர்பாக பிரபாகரனை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த மோசடியில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று கூடுதல் விசாரணை நடக்கிறது.